திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய மொபைல் செயலி அறிமுகம் – வெளியான அப்டேட்!!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் டி.டி.தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் மொபைல் செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மொபைல் செயலி:
ஆந்திராவில் பிரசித்தி பெற்ற கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க, ஒவ்வோரு மாதமும் முன் கூட்டியே முன்பதிவு செய்ய டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் குலுக்கல் முறை டிக்கெட் வெளியீடு, தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் இணைய தளத்தில் செய்யப்படுகிறது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இனி பக்தர்கள் மொபைல் செயலி மூலமாக இந்த சேவைகளை செய்ய புதிய செயலி ஒன்றை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த சேவைகளை செய்ய ‘கோவிந்தா’ எனும் மொபைல் செயலி நடைமுறையில் இருக்கும் நிலையில், தற்போது டி.டி.தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை முறையில் மொபைல் செயலி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது