சென்னை காவல்துறை அறிமுகப்படுத்திய புதிய செயலி – போக்குவரத்து அப்டேட்!
சென்னையின் முக்கிய சாலைகளில் டிராபிக் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
போக்குவரத்து அப்டேட்:
மாநில தலைநகரான சென்னையில் அதிக மக்கள் கூட்ட நெரிசல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் கல்வி மற்றும் பணி நிலையங்களுக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, சாலை மூடல்கள் மற்றும் டேக் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு தங்கள் பயணத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும் வகையில், ” roadEase” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த செயலியை போலீஸ் கமிஷனர் ஷங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
பண்டிகை கால போலி ஆபர்கள் – காவல்துறை எச்சரிக்கை! அலர்டா இருங்க!
Exams Daily Mobile App Download
போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு பணிகளை எளிதாக்க போக்குவரத்து காவலர்கள் சாலையின் ஒரு வழியை மூடுகிறார்கள் அல்லது வேறு சாலையை பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள், போக்குவரத்து மாற்றங்களைப் பற்றி பத்திரிகைச் செய்திகளை வெளியிடபட்டாலும், சமூக ஊடகத்தில் தெரிவித்தாலும், பயனர்கள் அறிந்து கொள்வதில் சிக்கல்கள் உள்ளதால் தான் இதற்காக தனிப்பட்ட செயலி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.