தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய அறிவிப்புகள் – அரசு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டிகளை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இதற்காக சுமார் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் போட்டிகள்
தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு விளையாட்டு துறையிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் செஸ் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வட்டார மற்றும் மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
Exams Daily Mobile App Download
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் 304 மாணவர்களுக்கு சர்வதேச போட்டிகளை பார்க்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு தமிழகத்தில் வட்டம், மாவட்டம் சார்பில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செஸ் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் போட்டிகள் குறித்த புத்தாக்க பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை? அரசு விளக்கம்!
மேலும், அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இது தவிர இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்குவதற்காக சுமார் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.