PF கணக்குதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ஓய்வூதிய திட்ட ஆலோசனை!
இந்தியாவில் அமைப்பு ரீதியான துறைகளின் கீழ் பணிபுரியும் ஊழியர்களில் 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது குறித்து வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
EPFO:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகின்றனர். இந்த தொகை ஊழியரின் ஓய்வு காலத்தில் வழங்கப்படும். தற்போது இடையில் எடுத்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பிஎப் கணக்குதாரர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் பிப்ரவரி 23 & 24 தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம் – தனியார்மயமாக்கல் எதிரொலி!
அதனை தொடர்ந்து பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். போன்ற புதிய அறிவிப்புகளை EPFO தங்களின் கணக்குதாரர்களுக்கு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பிஎப் உறுப்பினர்களிடையே அதிக பங்களிப்புக்கு அதிக ஓய்வூதியம் தேவை என்று கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அமைப்புசார் துறைகளின் கீழ் 15000 கீழ் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதியத்தில் இருந்து 8.33 சதவீதம் தொகை ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அதே போல் 15000 மேல் அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கும் 8.33% தொகை ஓய்வூதியத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – பிப்.25 முதல்..!
இந்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்க ரூ.15000 க்கு மேல் அடிப்படை ஊதியம் பெறுவோருக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கவுகாத்தியில் நடைபெறும் EPFO அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த புதிய ஓய்வூதியம் குறித்த முன்மொழிவு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.