Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

1
Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய அறிவிப்பு!
Zoho நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

இணைய அடிப்படையிலான வணிகக் கருவிகளை உருவாக்கும் இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ, தனது கிராமப்புற அலுவலகங்களில் சுமார் 2,000 பேரை புதிதாக பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனம் தனது கிராமப்புற அலுவலகங்களுக்கு புதிய ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சுமார் 2,000 பேரை வேலைக்கு அமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்புகளில் சுமார் 85% இந்தியாவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோஹோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், ‘தமிழகத்தை மையமாக கொண்டு உலகளாவிய அளவில் செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தில் தற்போது சுமார் 10,000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்த பணியில் கூடுதல் ஊழியர்களை அமர்த்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதன் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அலுவலகங்களுக்கு சுமார் 2,000 புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.

தமிழக திருக்கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் – முதல்வர் தொடங்கி வைப்பு!

இந்த புதிய பணியமர்த்தல் மென்பொருள் மேம்பாடு, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் நிர்வாகம் உட்பட அனைத்து செயல்பாடுகளிலும் மேற்கொள்ளப்படும்’ என கூறியுள்ளார். அந்த வகையில் ‘ஜோஹோ கிராமப்புற அலுவலகங்கள்’ என்ற பெயருடன் புதிய ஊழியர்களுக்கான பணியமர்த்தலை நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக உள்நாட்டில் திறமையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டத்தில் தனது முதல் கிராமப்புற அலுவலகத்தை ஜோஹோ திறந்தது.

இப்போது தென்காசி அலுவலகத்தில் சுமார் 500 ஊழியர்கள் உள்ளனர். இது தவிர ஜோஹோ நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் சுமார் 20 செயற்கைக்கோள் அல்லது கிராமப்புற அலுவலகங்களை அமைத்துள்ளது. இதே போன்ற கிராமப்புற மையங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு, பெரும்பாலான கிராமப்புற மையங்களில் 40 முதல் 50% ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

அரசு ஊழியர்கள் சம்பளம் பெற ‘இது’ கட்டாயம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!

தற்போது வரை சென்னையில் உள்ள அலுவலகத்தில் 10% ஊழியர்கள் பணி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோஹோ நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டு கணக்கிடப்பட்ட ரூ.3,411 கோடியிலிருந்து, தற்போது ரூ.4,386 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் இதன் நிகரலாபம் ஆண்டுதோறும் 55% உயர்ந்து ரூ.801 கோடியாக இருந்தது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!