தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - வெளியான 'ஜாக்பாட்' அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - வெளியான 'ஜாக்பாட்' அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ‘ஜாக்பாட்’ அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்தது, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் முதல் அமல்:

இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப அட்டை ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது தகுந்த அதிகாரியின் மூலம் பொது விநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் திமுக கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களிலேயே பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விவரம் இதோ!

அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பே உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் ஒரே நேரத்தில் பலர் விண்ணப்பித்ததால் அட்டைகளை விநியோகிப்பதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்தல் நடத்தை பணிகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு விண்ணப்பித்தோரில், தகுதியான 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, அரிசி அட்டைகள் வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!

இந்த வகையில் 19ம் தேதி தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் வழங்க வேண்டிய பொருட்கள், கிடங்குகளில் இருந்து இம்மாதம் 25 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. எனவே, புதிய அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை சீக்கிரம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!