தமிழகத்தில் 2 மாடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘இது’ கட்டாயம் – சிறப்பு அறிவிப்புகள்!

0
தமிழகத்தில் 2 மாடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் 'இது' கட்டாயம் - சிறப்பு அறிவிப்புகள்!
தமிழகத்தில் 2 மாடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் 'இது' கட்டாயம் - சிறப்பு அறிவிப்புகள்!
தமிழகத்தில் 2 மாடிக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘இது’ கட்டாயம் – சிறப்பு அறிவிப்புகள்!

சென்னை வண்டலூரை அடுத்து உள்ள கேளம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சட்டமன்ற பேரவையில் தகவல் அளித்துள்ளது.

பேருந்து நிலையம்

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 1) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், சென்னை கேளம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் பேருந்து நிலையம் தவிர சில கூடுதல் அறிவிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகளுக்கு மக்கள் கூட அனுமதிக்க கூடாது – ஒன்றிய அரசு அவசர கடிதம்!

அதன் கீழ், சென்னையை அடுத்த வண்டலூர் கேளம்பாக்கம் பகுதியில் ரூ.393 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகையில், கேளம்பாக்கத்தில் இருந்து தென் தமிழகத்திற்கு பேருந்து சேவைகள் இயக்கப்படும். தொடர்ந்து திருமழிசை அருகே அமைந்துள்ள குத்தம்பாக்கம் பகுதியில் ரூ.336 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து வரும் அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் நலிவடைந்த 262 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் கலைக்கப்படும். கூடுதலாக உலக வங்கியின் நிதியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ. 950 கோடி செலவில் 6000 புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கோயம்பேடு அங்காடி வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான உணவகம், தங்கும் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 11,497 மனைகள், 8061 குடியிருப்புகள் விற்பனைக்கு தயராக உள்ளது. சென்னை நந்தனம் பகுதியில் வர்த்தக மையத்தை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து மறு ஆய்வு செய்யப்படும். மேலும் பட்டினம்பாக்கத்தில் எதிர்கால வணிகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தவிர மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகள், 2 மாடிகளை கொண்டிருந்தாலும் அவற்றில் மின் தூக்கி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் இணையதள வசதிகளை மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் மேற்கொள்ள அதற்கான உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!