தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிறப்பு அனுமதி விபரங்கள்!
தமிழகத்தில் NTSE , NMMS உள்ளிட்ட அரசு தேர்வுகளுக்கு, தேர்வு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு மற்றும் துறை தேர்வு எழுத செல்லும் அரசு பணியாளர்களுக்கு அன்றைய தினம் சிறப்பு விடுப்பு வழங்குதல் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு சார்பில் பல்வேறு சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக NTSE , NMMS போன்ற அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வு பணிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த தேர்வுகள் வழக்கமாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை செல்வதால், அதனை ஈடு செய்ய அன்றைய தினம் பணிக்கலாமாக கருத வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டது.
TNPSC குரூப் 1 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – மே மாதம் தேர்வு நடத்த திட்டம்!
இந்த வகையில் தமிழ்நாடு அடிப்படை விதிகளில் , விதி 9 (6) (b) (ii) அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத்தேர்வு எழுதி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் எழுதும் தேர்வு நாளன்று பணிக்காலமாக கருதலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து வார இறுதி நாளன்று அரசு தேர்வு பணிக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு அன்றைய தினத்தை ஈடு செய்ய மற்ற ஒரு நாள் சிறப்பு விடுப்பு (OD) வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் அரசு தேர்வு பணிக்கு செல்லும், அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க அரசு விதிகளில் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.