விவசாயிகளுக்கான சூப்பர் திட்டம் – மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்.. விவரம் உள்ளே!
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் பிரதம மந்திரி கிசான் மன்தன் யோஜனா திட்டம். தற்போது இத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
ஓய்வூதியம்:
இந்தியாவில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் 2,000 வீதம் 3 கட்டங்களாக ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். அண்மையில் இந்த கிசான் திட்டத்தின் 12 – வது தவணை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டம் மூலம் 60 வயதை தாண்டிய விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர விரும்பும் விவசாயிகளுக்கு வயது 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் சொந்தமாக 2 ஹெக்டேருக்குள் நிலம் வைத்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். மேலும் இத்திட்டத்தில் சேர்ந்துள்ள விவசாயிகள் 60 வயதை எட்டும் வரை மாதம் ரூ.55 முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கு பாரத பிரதமர் மோடி நவ.11ல் வருகை – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!
Follow our Instagram for more Latest Updates
அதன் பிறகு விவசாயிகளுக்கு அரசு மாத ஓய்வூதியமாக ரூ. 3000 வழங்கும். இதன் மூலம் விவசாயிகள் ஒரு வருடத்திற்கு ரூ.36,000 பெறலாம். இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் ஆன்லைன் வாயிலாகவும், அரசின் பொது சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் அரசு பணியில் இருப்பவர்கள், 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.