பிரபல ஐடி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு.. ஒரே வருடத்தில் 1000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டம்!
பிரபல ஐடி நிறுவனமான அசென்டியன் புதிய பணியாளர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் CEO அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து வரும் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் ஐடி துறை வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டில் ஐடி துறை எதிர்பாராத அளவு வளர்ச்சியை கண்டது. இதனால் டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை தேர்வு செய்தனர். குறிப்பாக கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் படிப்பை முடித்த Fresher-களுக்கு வாய்ப்பளித்தனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து ஊழியர்களை தக்க வைக்கும் நடவடிகைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் ஐடி துறை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதற்கு மத்தியில் தங்களின் லாபத்தினை தக்க வைத்து கொள்ள ஐடி நிறுவனங்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
VIP-களுக்கு நல்ல சான்ஸ்.. வேலூர் மாவட்டத்தில் நவ.11 தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் உள்ளே!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் அசென்டியன் ஐடி நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் இந்தியாவில் உள்ள அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனையடுத்து வரும் 2023ம் ஆண்டில் 1,000 புதிய பொறியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.