விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை வேடத்தில் இனி புது நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையிலும், முல்லை கதாபாத்திரத்திற்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது முல்லை வேடம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புது முல்லை:
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு சில முறை நேர மாற்றங்கள் நடந்துள்ள போதிலும், தொடர் விறுவிறுப்பு குறையாமல் செல்வதால் ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றாலே அவர்களின் குடும்பம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். ஆனால் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தனியாக அதிக ரசிகர்களை கொண்ட முல்லை கதாபாத்திரம் அதிக கவனத்தை பெற்று வந்தது. முல்லை வேடத்தில் முதலில் விஜே சித்து தான் நடித்து வந்தார்.
‘ராஜா ராணி 2’ சித்து & ஸ்ரேயாவின் தல பொங்கல் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
அவர் நடித்த இரண்டு வருடமும் முல்லை வேடத்திற்காக அவர் நிறைய மெனக்கெடல்கள் செய்து வந்தார். இதன் விளைவால் ரசிகர்களின் மனதில் முல்லையாகவே அவர் பதிந்து விட்டிருந்தார். எதிர்பாராத விதமாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ரா தற்கொலை செய்து இறந்து விட வேறு வழியில்லாமல் முல்லையாக நடிகை காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். தற்போது காவ்யாவும் முல்லையாக மக்கள் மனதில் பதிந்து விட்டார். தற்போது சமீப நாட்களாக இணையத்தில் புதிதாக ஒரு புகைப்படம் வலம் வருகிறது.
Cook With Comali Season 3 Promo | பாலா உடன் இணைந்த மனோபாலா! ரசிகர்கள் உற்சாகம்!
அதில், முல்லை கதாபாத்திரம் போல் உடையணிந்து ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இருப்பது போல் உள்ளது. இதனை பார்த்த பலரும் சித்து போல் உள்ளதாகவும், முல்லையாக நடிக்க போவதாகவும் பல தகவல்கள் பரவி வருகின்றது, ஆனால் முல்லை போல் வேடமணிந்து இருப்பவர் பெயர் நடிகை அபிநயா என்றும் அவர் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பதாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது ஒரு புதிய வேடத்தில் தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.