‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல், என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர் – ரசிகர்கள் ஷாக்!
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்றுடன் கமல் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் கமல்:
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களிலும் இருந்து சுவாரஸ்யமான போட்டியாளர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையில் இதுவரை நான்கு பேர் எலிமினேடாகி இருக்கின்றனர்.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள்!
முதல் வாரம் சுரேஷ் சக்கரவர்த்தியும் இரண்டாம் வாரத்தில் சுஜா வருணியும், மூன்றாம் வாரத்தில் அபிநய் மற்றும் ஷாரிக் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். நடந்து முடிந்த ஐந்து சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் மூன்றாவது வாரத்துடன் கமல் இந்த நிகழ்ச்சியை விட்டு விலக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவித்தார்.
திருப்பதி இலவச தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 7 நாட்கள் வரை காத்திருப்பு!
ஆனால் அவருக்கு பிக்பாஸ் காண்ட்ராக்ட் முடிவடைந்துள்ள நிலையில், அவர் முழு ஈடுபாடுடன் அரசியலில் இறங்க இருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் கமலிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் வந்தார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமலிற்கு பதிலாக நடிகர் சிம்பு வர இருப்பதாக தகவல் பரவி வருகிறது.