விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நபர் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த மணி, சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வேறோரு நடிகர் களமிறங்கி இருக்கிறார்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. சந்தியாவின் லட்சியம் என்ன என்பதை சரவணன் தெரிந்து கொள்வாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அர்ச்சனாவின் உண்மையான முகம் தெரிந்தும் அவர் கர்ப்பமாக இருப்பதால் சரவணன் அவரை வீட்டிற்குள் வர சம்மதம் தெரிவிக்கிறார். இந்நிலையில் அர்ச்சனா சந்தியாவை பழி வாங்குவேன் என சவால் விடுகிறார். பதிலுக்கு சந்தியாவும் சவால் விடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா – புதிய அறிமுகம்! வைரலாகும் ப்ரோமோ!
சரவணன் சந்தியாவின் அப்பா அம்மாவின் புகைப்படத்தை பார்த்து மரண படுக்கையில் சந்தியாவின் அப்பா பேசியதை நினைத்து பார்க்கிறார். தன்னுடைய மகள் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என சரவணனிடம் சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் சந்தியாவின் கனவை சரவணன் தெரிந்து கொள்வார். சந்தியாவின் வாழ்க்கையில் நடந்த குழப்பத்திற்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்தது சந்தியாவின் அண்ணன் தான்.
பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!
அவர் வெளிநாட்டில் இருக்கிறார். இருந்தாலும் சந்தியாவின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்நிலையில் சந்தியாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடன கலைஞர் சால்சா மணி நடித்து வந்தார். தற்போது அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருப்பதாக இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடித்து இருக்கிறார். அதனால் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.