1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த கல்வியாண்டு மே 16 இல் துவக்கம்!
முன்கூட்டியே பள்ளி, கல்லூரிகளை திறந்து, வேலை நாட்களை அதிகரித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் மே 16ல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்:
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகளில் அதிக இறப்புகள் பதிவானது. மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடம் நடத்தி வந்தனர். ஆசிரியர்கள் எவ்வளவு தான் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் சரியாக பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு கல்வி மேம்பாட்டு திறன் அதிகரிக்கவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்களை குறைத்து தேர்வுகளை நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? சம்பளத்தில் உயர்வு!
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.அதனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கண்டிப்பான முறையில் பி.யு.சி., பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தீர்மானித்துள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேரடி முறையில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் பெரும்பாலான நாட்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்வதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், 2022 – 23ம் கல்வி ஆண்டில் பள்ளி -கல்லூரிகளை முன்கூட்டியே திறக்க, கர்நாடக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கர்நாடகாவில் 2022- 23-க்கான கல்வி ஆண்டு மே மாதம் துவங்குகிறது என்றும் மே 16ல் பள்ளி, பி.யு.சி., கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், அந்தந்த பள்ளி நிர்வாகங்கள், பள்ளி கட்டடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கர்நாடகாவில், வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும். ஆனால், கொரோனா பரவலால் பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டு இருந்ததால், வரும் கல்வி ஆண்டில் 15 நாட்கள் முன்னதாகவே திறக்கப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
ஜூன், ஜூலையில் கொரோனா நான்காம் அலை அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். திட்டமிட்டப்படி, மே 16 ல் ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம். இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் திறக்க படாததன் அடிப்படையில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பெங்களூர் அரசு அறிவித்துள்ளது.