இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் புதிய 500 ரூபாய் நோட்டுகள்? RBI அதிரடி நடவடிக்கை!
சமீப காலமாக ரூபாய் நோட்டுகளில் அதிகளவு கள்ளநோட்டுகள் சேர்ந்து புழக்கத்தில் இருந்து வருவதால் இப்போது புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூபாய் நோட்டுகள்:
இந்தியாவில் வங்கி ATM தொடர்பான மோசடிகள் ஒரு பக்கம் பெருகிக் கொண்டு இருக்க மறுபக்கத்தில் கள்ளநோட்டுகளின் புழக்கமும் அரசுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. அதாவது, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் பெருமளவு கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படுவதால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டில் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இந்தியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் , கள்ள நோட்டு புழக்கத்தை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குறைந்த விலை ரீசார்ஜ் திட்டம்!
இப்போது சந்தையில் இருக்கும் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கள்ள நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை தற்போது அரசு குறைத்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்போது 500 ரூபாய் நோட்டுகளையும் மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக, போலியான 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தான் அதிக அளவில் பறிமுதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கள்ள நோட்டுகளுடன் வித்தியாசத்தை உண்டு பண்ணும் புதிய தொழில்நுட்பம் மூலம் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் போலியாக உருவாக்கப்பட முடியாத, முற்றிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.