விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள் – கடுப்பாக்கிய கதைக்களம்!
பாரதி கண்ணம்மா தொடரில் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிக்காமல் அவசியமே இல்லாமல் பல சீன்களை காட்டி கொண்டிருப்பதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். இதனால் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பாரதி கண்ணம்மா தொடரை வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை பாரதி எப்போது தான் ஏற்றுக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். DNA டெஸ்ட் எடுத்து விட்டால் பாரதிக்கு அனைத்து உண்மையும் தெரிந்து கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார். ஆனால் DNA டெஸ்ட் எடுத்து விட்டால் சீரியலே முடிவடைந்துவிடும். ஆனால் அதை மட்டும் செய்யாமல் பாரதி கண்ணம்மா தொடரை இழுத்து கொண்டிருக்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
அதாவது சென்னையில் உள்ள ஒரு குழந்தைக்கு விழுப்புரத்தில் இருந்து இதயத்தை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல பிளான் செய்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரின் உதவியோடு குழந்தைக்கு இதயத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. அப்போது கண்ணம்மா தான் பிளான் செய்து ஆம்புலன்ஸ் உதவியுடன் இதயத்தை கொண்டு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றினார். கண்ணம்மா தான், சரியான நேரத்தில் பிளான் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் என கூறி பாரதி பாராட்டுகிறார்.
பாரதி கண்ணம்மாவை புகழ்ந்து பேசியதை பார்த்து குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். தற்போது கூட சம்மந்தமே இல்லாமல் ஒரு குழந்தையின் இதயத்தை வைத்து கதையை ஓட்டி கொண்டிருக்கிறார்கள். எதற்காக தேவையில்லாமல் இந்த தொடரில் இந்த சீனை வைக்க வேண்டும். ஒரு ஆர்வமே இல்லாமல் சீரியல் போய் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். இவ்வாறு தேவையில்லாமல் கதையை ஓட்டாமல் சீரியலை முடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்