பாரதி கண்ணம்மா சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – எதெற்காக தெரியுமா?

0
பாரதி கண்ணம்மா சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - எதெற்காக தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - எதெற்காக தெரியுமா?
பாரதி கண்ணம்மா சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – எதெற்காக தெரியுமா?

பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் மட்டும் எடுத்துவிட்டால் சீரியலே முடிவடைந்துவிடும். DNA டெஸ்டை மட்டும் எடுக்காமல் சீரியலை ஓட்டி கொண்டிருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியலை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் என்ன தான் டிஆர்பியில் முன்னிலையில் இருந்து வந்தாலும் ரசிகர்களுக்கு போர் அடிக்க துவங்கியுள்ளது. அதாவது கண்ணம்மாவை பாரதி வீட்டை விட்டு துரத்தி கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. இப்போது வரைக்கும் DNA டெஸ்ட் எடுக்காமல் சுற்றி கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

DNA டெஸ்ட் எடுத்து பாரதி அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டால் சீரியலே முடிவடைந்துவிடும். இதனால் சம்மந்தமே இல்லாமல் சீரியலை பல வாக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். ரசிகர்களும் சீரியலை பார்க்கவே வெறுத்து கொண்டிருக்கின்றனர். சம்மந்தமே இல்லாமல் பாரதி கண்ணம்மா தொடரில் ஷர்மிளா மற்றும் விக்ரம் ஆகிய இருவரை அறிமுகப்படுத்துகின்றனர். மேலும், விக்ரம் மருத்துவமனையில் பாரதி சீஃப் டாக்டராக சேருகிறார். இதுமட்டுமல்லாமல் கண்ணம்மாவும் பாரதி வேலை பார்க்கும் மருத்துவமனையில் வேலைக்கு சேருகிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜூலி – வைரலாகும் புகைப்படம்!

மாவு விற்பனை செய்து குடும்பத்தை ஓட்டி வந்த கண்ணம்மா ஏன் இத்தனை நாட்களாக இது போன்ற வேலைக்கு செல்லவில்லை. பாரதி வேலைக்கு சேர்ந்த பிறகு தான் சேர வேண்டுமா என ரசிகர்கள் மனதில் பல கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி வேலை பார்க்கும் மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு இதயம் தேவைப்படுகிறது. அதே மருத்துவமனையில் மற்றொரு குழந்தை மூளை சாவு அடைந்துள்ளது. அப்போது அந்த குழந்தையின் இதயத்தை கேட்கும்போது அந்த குழந்தையின் பெற்றோர்கள் மறுத்துவிடுகின்றனர். ஆனால், கண்ணம்மா இதயம் தேவைப்படும் அந்த குழந்தையின் பெற்றோரை இந்த மூளைச்சாவு அடைந்த குழந்தையின் பெற்றோரிடம் பேச வைக்கிறார். அப்போது அந்த பெற்றோர்கள் ஒப்புக்கொள்கிறனர். பாரதியும் இதையே தான் கூறினார். கண்ணம்மா கேட்கும் போது மட்டும் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!