நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
நெல்லை சாப்டர் பள்ளி திறப்பு தள்ளிவைப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சாப்டர் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடைந்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியதும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு 2021 டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை 9 நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி 2 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமெடுக்க தொடங்கியது.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!

அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட்து. மேலும் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவர்களும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் இன்று முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்த சாப்டர் பள்ளி திறப்பு மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி கட்டிட ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி கட்டிட பராமரிப்பு, புதுப்பிப்பு போன்ற பணிகள் முடிவடைந்து சான்றுகளை ஆய்வு செய்த பிறகு பள்ளி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதுவரை சாப்டர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்க பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!