“பாரதி கண்ணம்மா” சீரியலை விட்டு விலகுகிறாரா வில்லி வெண்பா பரீனா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்த நிலையில் தற்போது சுவாரஸ்யமான கதை எதுவும் இல்லாத காரணத்தால் போர் அடித்து வருகிறது. இந்நிலையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா சீரியலை விட்டு விலக இருப்பதாக வெளியான செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு காலகட்டத்தில் நம்பர் ஒன் சீரியல் பட்டியலில் இருந்தது. பாரதி மற்றும் கண்ணம்மா சேர்வார்களா, பாரதி DNA எடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது என்பது தெரிந்துவிட்டது. கதையில் விறுவிறுப்பை கொண்டு வருவது போல ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் ஒரு சில புதிய கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனால் கதையில் மாறுதல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் அது எதுவும் நடக்காமல் தற்போது கதை வழக்கம் போல கொண்டு செல்லப்படுகிறது. வெண்பாவின் அம்மா ஷர்மிளாவின் எண்ட்ரியால் வெண்பா கதாபாத்திரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. வெண்பாவிற்கு திருமணம் நடக்குமா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்போது அப்படியே அந்த பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டு ஷர்மிளா வெளிநாட்டிற்கு சென்று விட்டது போல காட்டப்படுகிறது. மேலும் வெண்பா மனதில் இடம் பிடிக்க ரோஹித் செய்யும் செயல்கள் ரசிகர்களை எரிச்சலூட்டுகிறது.
தற்போது பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக பிடிவாதமாக இருக்க ஆனால் ஹேமா அழுது அந்த திட்டத்தை கைவிட வைக்கிறார். மறுபக்கம் லக்ஷ்மிக்கு எல்லா உண்மையும் தெரிந்தும் அமைதியாக இருக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் வெண்பாவாக நடித்து வரும் பரீனா விஜய் டிவியில் Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்துள்ளது.