“பாரதி கண்ணம்மா” வெண்பாவின் கர்ப்பகால நெகட்டிவ் கமெண்ட்ஸ் – பதிலடி கொடுத்தவருக்கு நன்றி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கர்ப்பகாலத்தில் எடுத்த புகைப்படங்களுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் அனைத்திற்கும் அவர் தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார்.
பாரதி கண்ணம்மா வெண்பா:
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து தமிழ் சின்னத்திரையில் இளம் வில்லி என தனக்கொரு இடம் பிடித்தவர் நடிகை பரீனா. அவருக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அவர் அதோடு நிறுத்தி விடாமல் கர்ப்பகால போட்டோஷூட் என்ற பெயரில் பல ரிஸ்க் போட்டோஷூட்களை எடுத்து இருக்கிறார்.
நீருக்கு அடியில் எடுப்பது, குதிரையுடன் எடுப்பது, கர்ப்பமாக இருக்கும் வயிற்றில் மெஹந்தி போட்டு புகைப்படம் எடுப்பது, பாத் டப் புகைப்படம் என அவரது போட்டோஷூட் மோகம் எல்லை மீறி சென்றது. அதை பொறுக்க முடியாமல் பல நெகட்டிவ் கமெண்ட்களை குவித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுக் கொள்ளாமல் குழந்தை பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் பல தரக்குறைவான கமெண்ட்ஸ் அனைத்திற்கும் அவர் தற்போது பதில் அளித்து இருக்கிறார்.
அதில் ஒரு கமெண்டில் உன்னை பார்த்து மற்ற பெண்கள் கேட்டுவிட போறாங்க ஏன் இப்படி பண்ணுற என கேட்க, அவருக்கு பரீனா சொன்ன பதில், ஏன் இது போல பெண்கள் எல்லாரும் விருப்பப்படி இருக்க தொடங்கி விட்டால் ஆணாதிக்கம் குறைந்துவிடும் என்ற பயமா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தான் பரீனா தாக்கப்படுகிறாரா? அப்படி என்றால் பரீனா நல்ல முன்னுதாரணமாக தான் இருக்கிறாள் என செய்திருக்கிறார். மற்றொருவர் போட்டோ எடுக்க தான் குழந்தை பெற்றுக் கொள்கிறாயா என கேட்டுள்ளார். அதற்கு பரீனா, பேபி பம்ப் போட்டோ எடுப்பது என்பது இந்த காலத்தில் பெண்கள் அதிகம் விரும்பும் ஒரு விஷயம்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இசைவாணி வாங்கிய சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!
அதை வெளியிடுவதும், வெளியிடாமல் இருப்பதும் அவங்க இஷ்டம், ரொம்ப சிம்பிளா சொல்லணும் என்றால் அது அவளுடைய வயிறு, அவளுடைய உடம்பு, அவளுடைய விருப்பம் என பதிவிட்டிருக்கிறார். மகப்பேறு காலத்தில் மகிழ்ச்சியை படம் பிடிப்பது தப்பு இல்லையே என கேள்வி எழுப்பி இருக்கிறார். மற்றொருவர் பணம் இருந்தால் இப்படி எல்லாம் பண்ணுவியா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் ஒரு பெண் பொருளாதார சுதந்திரத்துடன் இருந்தா, அவளுக்கு பிடித்த விஷயத்தை பண்ணிட்டா, கலாச்சார காவலர்களால பொறுக்க முடிவதில்லை, உடனே எதையாவது லாஜிக் இல்லாமல் உளறுவது என பதிலடி கொடுத்திருக்கிறார்.