NEET PG தேர்வுகள் ஒத்திவைப்பு – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் (NEET PG) தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
NEET PG தேர்வுகள்:
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி முதுநிலை நீட் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பினை மத்திய கல்வித்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 15 முதல் முழு ஊரடங்கு? மத்திய அரசு விளக்கம்!
அவரது ட்விட்டர் பதிவில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருந்த NEET PG தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்