வரும் 15 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி
தமிழக பள்ளி மாணவர்கள் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளில் தேர்ச்சி பெற தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையங்களில் கடந்த அக்டோபர் மதம் முதுநிலை ஆசிரியர்களால் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
மார்ச் மாதத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கியதால், இந்த பயிற்சி வகுருப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன்பின் ஆன்லைன் மூலமாக இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் நீட் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதனில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டவில்லை. தற்போது கற்றல் மற்றும் மதிப்பீட்டு தளமாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இ – பாக்ஸ் நிறுவனம் மூலம்நெட் தேர்விற்கு ஆன்லைனில் இலவச பயிற்சி வரும் 15 ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு
6500 கும் மேற்பட்ட கேள்விகள் உள்ளடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் வீடியோ மூலம் தேர்வுகளுக்கு பயிற்சிகள் நடைபெறும். தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |