நீட் விலக்கு மசோதா விவகாரம் – முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு?
தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நீட் விலக்கு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு ஆய்வினை மேற்கொண்டது. நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்த நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, கடந்த ஜூலை 14-ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் ஆய்வின் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!
அந்த குழு தாக்கல் செய்த அறிக்கை மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் ஆய்வறிக்கையை நாட்டின் மற்ற மாநில முதல்வர்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு எதுவாக அந்த அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ,மராத்தி, பெங்காலி ஆகிய 7 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு கோரி சட்ட மசோதா இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இதனால் நீட் தேர்வு விலக்கு குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை முதல்வர் முக ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்து பேசியுள்ளார். முதல்வருடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலர் இறையன்பு ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாகவும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.