ஆன்லைனில் ஆண்டுக்கு இரு முறை ‘நீட்’ தேர்வு?? தேசிய தேர்வு முகமை முக்கிய கடிதம்!!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வினை ஆண்டுக்கு இருமுறை ஆன்லைனில் நடத்துவது குறித்து, தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேரடியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுகள்:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது. அதில் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மருத்துவ கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் 2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நீட் தேர்வுகள் நடத்தப்பட்டது.
50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் கிடையாது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தற்போது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டு உள்ளது. அதில் நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை ஆன்லைன் வாயிலாக நடத்தலாமா? என கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் தேர்வு மன அழுத்தத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் என்டிஏ இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு ஒத்திவைப்பு – இலங்கை அரசு அறிவிப்பு!!
என்டிஏ எழுதி உள்ள கடிதத்தில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே அதனை போக்கும் வகையில் ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மேலும் இதனை வழக்கமான எழுத்துத் தேர்வாக இல்லாமல் ஆன்லைன் முறையில் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்