நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு !
நீட் தேர்வில் சாதித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நீட் தேர்வு குறித்த அறிக்கை:
கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளுடன் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அண்மையில் இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வுகளில் தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த பல மாணவர்கள் வெற்றி பெற்றனர். அரசு வழங்கிய இலவச பயிற்சி மையங்களில் படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதனால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிச்சியை ஏற்படுத்தி தந்துள்ளது. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் எவ்வாறு சாதிப்பார்கள் என்ற அச்சத்தையும் அனைவரின் மனத்தில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டே மருத்துவ சேர்க்கைக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை செயல்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
நீட் தேர்வு குறித்த அமைச்சரின் அறிக்கை :
ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், கட் ஆப் மூலமே சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே மருத்துவ சீட்டு பெற தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கண்டிப்பாக 303 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
TET தேர்வு குறித்த அமைச்சரின் அறிக்கை :
“இந்த நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து மக்களும் கூடிய விரைவில் மகிழ்ச்சி அடையும் வண்ணம் நல்ல செய்தியாக அது இருக்கும். அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு TET எனப்படும் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் பணிகளில் சேர வயது ஒரு தடை இல்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் TET தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அந்த சான்றிதழை தங்களது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்