தமிழகத்தில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை – ராமதாஸ் கோரிக்கை!
நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் நீட் தேர்வில் மோசடி செய்வது அம்பலமாகியுள்ளது. எனவே 12ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்த ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு வேலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகளை செய்ததாகக் கூறி, மராட்டிய மாநிலம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மற்றும் கல்வி வழிகாட்டுதல் நிறுவனம் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, அதன் உரிமையாளரை கைது செய்துள்ளனர். 50 லட்சம் கொடுத்தால் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வதற்காக போலிச் சான்றிதழ், போலி அடையாள அட்டை உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
மருத்துவ படிப்பில் தரமான மாணவர்களை சேர்க்க நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளனர். நடப்பாண்டில் நீட் தேர்வு வினாத்தாள் ஜெய்ப்பூரில் ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று பலர் மோசடி செய்து மருத்துவ படிப்பை படித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. எனவே 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.