நீட் தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவு, ஆன்சர் கீ & டை பிரேக்கிங் கணக்கீடு விவரங்கள் இதோ!
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் டை பிரேக்கிங் பார்முலா குறித்த விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. பொதுவாக நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு தேர்வுகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கு மத்தியில் தேசிய தேர்வு முகமை (NTA) இந்த ஆண்டுக்கான நீட் தேர்வின் ஆன்சர் கீயை கடந்த 15ம் தேதி வெளியிட்டது.
ஆன்லைன் வாயிலாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் நீட் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதியுள்ளனர். இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது விண்ணப்பதாரர்கள் எழுப்பிய கேள்விகள் சரிபார்க்கப்பட்டு இறுதி ஆன்சர் கீ வெளியிடப்படும். அந்த வகையில் நீட் தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியானதும் அதனை NTAன் neet.nta.nic.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இப்போது தேர்வு முடிவுகளுடன் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய இருக்கை ஒதுக்கீடு தரவரிசை பட்டியலும் வெளியாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த தரவரிசை பட்டியலை உருவாக்குவதில் டை பிரேக்கிங் பார்முலா என்றவொரு விதி பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீட் தேர்வில் பல மாணவர்கள் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுக்கும் பட்சத்தில் இந்த டை பிரேக்கிங் பார்முலா பின்பற்றப்படுகிறது.
தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – தன்னார்வலராக இணைவது எப்படி?
இந்த ஆண்டு முதல் டை பிரேக்கிங் பார்முலாவில் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது. தவிர நீட் தேர்வில் உயிரியல் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் நபர்களுக்கு இனி முன்னுரிமை வழங்கப்படும். இதிலும் டை என்கிற ஒரே மதிப்பெண்கள் நீடித்தால் அடுத்ததாக வேதியியல் பாடத்தின் மதிப்பெண்கள் முக்கியமானதாக கணக்கிடப்படும். இப்போதும் மதிப்பெண்கள் டை ஆகும் பட்சத்தில், அனைத்து தேர்விலும் குறைவான அளவு தவறிழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.