தமிழகத்தில் நீட் தேர்வு – மத்திய கல்வி அமைச்சர் அளித்துள்ள முக்கிய விளக்கம்!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் வந்திருந்த மத்திய கல்வி அமைச்சர் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
நீட் தேர்வு:
இந்தியாவில் தேசிய தேர்வு முகமை (NTA) மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனும் நுழைவுத்தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. சுமார் 18.72 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்த நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் தொடர்ந்து அதற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். அதுவே கிராமங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்களால் கட்டணம் செலுத்தி நீட் தேர்வுக்கான பயிற்சியை பெற முடியாத அவல நிலை ஏற்படுகிறது. அத்துடன் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவோடு படித்த வந்த மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியை சந்திக்கும் போது தனது எதிர்கால நிலை குறித்து கவலை கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் சிலர் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
தமிழகத்தில் இந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் – அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!
Exams Daily Mobile App Download
அதனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் வந்திருந்த மத்திய கல்வி அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் சமன்படுத்தவே நீட் தேர்வு என்று கூறியுள்ளார். மேலும் நீட் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு இல்லை. அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றும் இதில் அரசு தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் தேசிய கல்வி கொள்கையில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்