மாணவர்கள் தங்களின் நீட் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம்!
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு மே இறுதி வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சமாக தற்போது தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
National Testing Agency NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை, இந்த 2020-21 கல்வியாண்டிற்கான நீட் தேர்வை மே 5 ஆம் தேதி நடத்துவதாக திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே மாதம் கடைசி வாரத்துக்கு நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்வு தேதி மாற்றத்தை மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில், விண்ணப்பப்படிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக நீட் தேர்வு விண்ணப்பிக்கும் போது பல மாணவர்கள் தெரியாமல் தவறுகள் செய்து விடுவார்கள். இது நீட் தேர்வு எழுதும் போதும், மருத்துவக்கல்லூரியில் சேரும் போதும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு விண்ணப்பப்படிவத்தில் தவறுகள் இருந்தால், அதனை திருத்திக் கொள்ள் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் தங்களுடைய தேர்வு மையத்தையும் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாணவர்களுக்கு தேர்வு எழுதும் மையங்களை தேர்ந்தெடுப்பதில் மனமாற்றம் ஏற்பட்டிருக்கும். இதற்கு முன்பு தேர்வு மையத்தை மாற்றம் செய்ய அனுமதி இல்லாமல் இருந்தது. தற்போது மாணவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வு மையத்தை தெரிவு செய்யலாம். இருப்பினும் NTA ஒதுக்கும் தேர்வு மையமே இறுதி முடிவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்