தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு – எம்.பி., கோரிக்கை!!
நீட் தேர்வுகள்:
தேசிய தேர்வுகள் முகமை நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மருத்துவ மேற்படிப்புக்காக நீட் தேர்வை நடத்துகிறது. இளநிலை மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் முதுநிலை படிப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
மருத்துவ மேற்படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு விண்ணப்பம் – மார்ச் 15ம் தேதி இறுதி நாள்!!
நடப்பு ஆண்டு தேர்வு:
நடப்பு ஆண்டில் மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 23ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மதுரை எம்.பி.வெங்கடேசன் அவர்கள் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்ப பதிவு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கியது. அதில், 4 மணி நேரங்களிலேயே தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டது.
இதனால் மாணவர்கள் பதற்றமான மனநிலையில் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு பயணிப்பது பாதுகாப்பானது அல்ல. எனவே மருத்துவ மாணவர்களின் நியாமான உணர்வுகளை கணக்கில் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வுக்கான கூடுதல் தேர்வு மையங்களை உடனடியாக ஏற்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை கடிதத்தில் கூறியிருந்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்