நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பு – மத்திய அரசு திட்டமிடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. தற்போது ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் 26 அன்று நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீட் தேர்வினை நடத்துவது சவாலான காரியம் என்றும், இந்த முறை 12.6 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளதால் மிகப்பெரிய சவால் அளிப்பதாக இருக்கும் என்றும் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
சமூக இடைவெளியினை கடைபிடிப்பது அவசியம் என்பதால் கடந்த முறை 2500 மேற்பட்ட தேர்வு மையங்கள் பயன்படுத்தப்பட்டது. இம்முறை அதற்கும் அதிகமாக தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |