மருத்துவ படிப்பிற்கான முதுகலை NEET நுழைவுத்தேர்வு – விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி!!
இந்தியாவில் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான காலக்கெடு ஜன. 27ம் தேதியுடன் முடிவடையுள்ளது. எனவே மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீட் நுழைவு தேர்வு:
இந்தியாவில் MBBS., BDS., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது.
மும்பை விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வந்த மின்சார வாகனங்கள் – நிர்வாகத்தின் புது முயற்சி!!
நடப்பு ஆண்டிற்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான (NEET PG) நீட் தேர்வு மார்க் 5-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இதற்கான காலக்கெடு நாளையுடன் ( ஜன. 27) முடிவடைய உள்ளது.
அதனால் மாணவர்கள் natboard.edu.in என்ற இணையதளமாக வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதன் பிறகு ஜனவரி 30 ஆம் தேதி பிப்ரவரி 3 -ஆம் தேதி வரை விண்ணப்பிப்பதில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நடைமுறைகளுக்கும் பிறகு தேர்வுக்கான அனுமதி சீட்டு பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.