நாடு முழுவதும் நீட் தேர்வு 13ம் தேதி நடைபெறும் ! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

0
நாடு முழுவதும் நீட் தேர்வு 13ம் தேதி நடைபெறும் ! - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நாடு முழுவதும் நீட் தேர்வு 13ம் தேதி நடைபெறும் ! - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நாடு முழுவதும் நீட் தேர்வு 13ம் தேதி நடைபெறும் ! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த தடை கோரி, மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி தேர்வு நடக்கும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

நீட் தேர்வு 2020 :

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இந்த நீட் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

மீண்டும் அந்த தேர்வுகள் வரும் செப் 13 ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததனை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும் மறு சீராய்வு மனு கோரப்பட்டது. இதுவும் தள்ளுபடியான நிலையில் நோய் தொற்றின் தாக்கம் இன்னும் குறையாததினால் மீண்டும் இந்த தேர்வுகளை தள்ளிவைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

ஆனால் இதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே வழக்குகள் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி தேர்வினை தள்ளி வைக்க முடியாது என்று அறிவித்து விட்டது. மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து இருப்பதனால் வரும் 13 ஆம் தேதி கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் என தெரிகிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!