நாடு முழுவதும் நீட் தேர்வு 13ம் தேதி நடைபெறும் ! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
கொரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த தடை கோரி, மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி தேர்வு நடக்கும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
நீட் தேர்வு 2020 :
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இந்த நீட் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணத்தினால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !
ஆனால் இதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே வழக்குகள் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி தேர்வினை தள்ளி வைக்க முடியாது என்று அறிவித்து விட்டது. மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வு திட்டமிட்டபடி வரும் 13ம் தேதி நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்து இருப்பதனால் வரும் 13 ஆம் தேதி கட்டாயம் நீட் தேர்வு நடைபெறும் என தெரிகிறது.
பள்ளிகள் திறப்பு எப்போது ? – அதிகாரபூர்வமாக அறிவித்த மத்திய அரசு
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்