உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா – 19 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!
அமெரிக்காவில் ஓரிகான் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளி வென்றுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வெள்ளி பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா:
உலக தடகள சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவும் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மேலும் தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்திருந்த அவர், 80.42 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடம் பிடித்தார்.
தமிழகத்தில் ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் 2022 – 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
மேலும் தகுதி சுற்றில் ஒட்டுமொத்தமாக ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 89.91 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். மேலும் நீரஜ் சோப்ரா 2வது இடத்தையும் ரோஹித் யாதவ் 11-வது இடத்தையும் பிடித்தனர். இதில் தங்கம் வென்று சாதிப்பார்களா இந்திய வீரர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்நோக்கி இருந்தது. மேலும் இறுதி சுற்று இந்திய நேரப்படி இன்று காலை 7.05 மணிக்கு நடைபெற்றது .அதில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார்.
அதாவது 88.13 மீட்டர் தூரம் எறிந்து நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.40 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பதக்கம் வென்றது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 2003ம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்ற பிறகு 19 ஆண்டுகளாக இந்தியா பதக்கம் பெறாமல் இருந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.