டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2020 – தங்க மகன் ஆவாரா நீரஜ் சோப்ரா?
இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் நடைபெற்ற போட்டியில் தற்போது இந்தியாவின் நீரஜ் சோப்ரா தற்போது தங்கம் வென்று அனைவரின் கனவினையும் நிறைவேற்றி உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்:
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டி தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து அசத்தினார். இதில் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 87.03 மீட்டர் வீசி முன்னிலையில் இருந்தார். 2வது சுற்றில் 87.58 மீட்டர் வீசினார். இதன் முடிவிலும் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்து. 3வது சுற்றில் 76.79 மீட்டர் எறிந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கப் பதக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தற்போது நடைபெற்ற நான்காவது சுற்றின் முடிவிலும் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.
மீண்டும், நடந்து முடிந்த சுற்றில் நீரஜ் சோப்ரா தனது முதல் இடத்தினை தக்கவைத்து வருகிறார். இதனால் சோப்ரா தங்க பதக்கம் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது
6வது சுற்றின் முடிவில் 87.58 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தினை வென்றுள்ளார்.