ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைக்க வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைக்க வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைக்க வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைக்க வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. அத்துடன் அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நிதிச் சேவைகளுக்கும் இது பயன்படுகிறது. தற்போது ஆதார் கார்டில் புதிய நம்பரை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

ஆதார் கார்டு

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். மேலும் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. மேலும் பல்வேறு சேவைகளை பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. அந்த வகையில் வாகனங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களிலும் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதனால் அனைவரும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

இந்த ஆதார் கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம், கைரேகை, கருவிழி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இதில் 12 இலக்க அடையாள எண்ணும் இடம் பெற்றிருக்கும். இப்போது தங்களின் ஆதார் கார்டில் பழைய புகைப்படம் அல்லது முகவரி மேலும் இது போன்ற தங்களின் தகவல்களை ஆன்லைன் முறையில் சுலபமாக மாற்றலாம். இதற்கு UIDAI ஆன்லைன் போர்ட்டலில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது தங்களின் ஆதார் கார்டுடன் புதிய மொபைல் நம்பரை இணைப்பதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

1. முதலாவதாக UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ask.uidai.gov.in என்ற லிங்கில் உள்நுழைய வேண்டும்.

2. இப்போது தங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டு கணக்கிற்குள் உள் நுழைய வேண்டும்.

3. இதையடுத்து ஆன்லைன் ஆதார் சர்வீஸ் செக்ஷனிலிருந்து இருந்து “மொபைல் நம்பர்” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் 45 நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கடும் அவதியில் 400 மில்லியன் மக்கள்!

4. இப்போது தங்களின் அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும். அத்துடன் கேப்ட்சா குறியீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.

5. இப்போது நீங்கள் உள்ளிட்ட புதிய போன் நம்பருக்கு OTP எண் அனுப்பப்படும். அதனை அந்த தளத்தில் கொடுத்த பிறகு ‘சேவ் அண்ட் ப்ரொசீட்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!