வண்டலூர் பூங்காவிற்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை – பொங்கல் விடுமுறை எதிரொலி!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தினங்களில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுமார் 1 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கல் விடுமுறை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அந்த வகையில், தொடர் விடுமுறைகளை கொண்டாடும் விதமாக பொது மக்கள் பலரும் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுத்தனர்.
தெலுங்கானாவில் நாளை BRS பொதுக்கூட்டம் – பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் பங்கேற்பு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், சென்னையில் உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகைதந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 91 ஆயிரம் பேர் பெரியவர்கள் மற்றும் 9 ஆயிரம் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மக்கள் வருகை வழக்கத்தை விட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.