நாடு முழுவதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல் – கல்வி அமைச்சகம் தகவல்!!

0
நாடு முழுவதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல் - கல்வி அமைச்சகம் தகவல்!!
நாடு முழுவதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல் - கல்வி அமைச்சகம் தகவல்!!
நாடு முழுவதும் 1 மில்லியன் மாணவர்கள் இடைநிற்றல் – கல்வி அமைச்சகம் தகவல்!!

இந்தியாவில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியில் இருந்து இடைநின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் தொடக்க நிலைக்கல்வியை மட்டுமே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி இடைநிற்றல்

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு காணப்பட்டாலும், இடைநிற்றல் என்பதும் கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடைநின்றுள்ளதாக கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார். அந்த வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதிலும் இருந்து 12,53,019 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

சென்னைவாசிகள் கவனத்திற்கு – சுத்தம் செய்யும் பணி! மாநகராட்சி தகவல்!!

இதில் பெண்களை விட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த கல்வியாண்டில் 6,97,121 சிறுவர்கள், 5,55,854 பெண்கள் மற்றும் 44 திருநங்கைகள் கல்வியை தவறவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஆரம்ப நிலையில் 9,30,531 குழந்தைகளும், இடைநிலை மட்டத்தில் 3,22,488 குழந்தைகளும் கல்வி கற்பதில் இருந்து இடைநின்றதாக அறிக்கைகள் கூறுகிறது. இதனிடையே, தமிழகத்தில் மட்டும் 20,352 பேர் படிப்பை நிறுத்தியதாக தரவுகள் விளக்குகின்றன.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!