ரயில்வேயில் 1664 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
வடக்கு மத்திய ரயில்வேயானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Apprentice பணிக்கான 1664 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வடக்கு மத்திய ரயில்வே வெளியிட வேலைவாய்ப்பு அறிவிப்பில் 1664 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
- விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Coaching Center Join Now
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI படித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் SC/ ST/ PWD/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று 01.12.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.