NCERT நிறுவனத்தில் 54 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/-
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) தற்போது உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு Junior Project Fellows, Office Assistant, Accountant மற்றும் Consultant பணிக்கு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்கள் இப்பதிவின் வழியாக உங்கள் பதிவுகளை எளிதாக மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Council of Educational Research and Training (NCERT) |
பணியின் பெயர் | Junior Project Fellows, Office Assistant, Accountant, Consultant |
பணியிடங்கள் | 54 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
NCERT காலிப்பணியிடங்கள் :
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், Junior Project Fellows,Office Assistant, Accountant மற்றும் Consultant பணிக்கு என்று மொத்தம் 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Senior Consultant (Academic) பணிக்கு – 06
- Consultant (Academic) பணிக்கு – 29
- Project Associate / Survey Associate /Senior Research Associate – 05
- Junior Project Fellow பணிக்கு – 12
- Office Assistant பணிக்கு – 01
- Accountant பணிக்கு – 01
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
NCERT கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate, Post Graduate, B.Ed, M.Ed, Ph.D., M.Phil போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
NCERT வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களுக்கு Junior Project Fellow பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயதும், மற்ற பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 65 வயதும் நிர்ணயம் செய்துள்ளது. வயது தளர்வு குறித்த கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.
NCERT ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும்.
NCERT தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
NCERT விண்ணப்பிக்கும் முறை :
தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை 15.01.2022 தேதிக்குள் செய்து கொள்ளவும்.