இயற்கையாகவே கருவுற்ற முல்லை – வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்! ரசிகர்கள் மகிழ்ச்சி!
முல்லை செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வாரா என எதிர்பார்த்த நேரத்தில் முல்லை இயற்கையாகவே கருவுற்று இதற்குப் பிறகு முல்லைக்குத் குடும்பத்தினர்கள் அனைவரும் வளைகாப்பு வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காத விஷயத்தை வைத்து தான் கடந்த ஒரு மாத காலமாகவே சீரியல் ஓடிக் கொண்டிருக்கின்றன. முல்லையால் இயற்கையாக மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார். மருத்துவர் கூறியதைத் தொடர்ந்து குடும்பத்தினரும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுக்கின்றனர்.
சன் டிவி “கயல்” சீரியல் செய்த சாதனை – பரிதாப நிலையில் பாரதி கண்ணம்மா! குவியும் வாழ்த்துக்கள்!
ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய செலவாகும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் மூர்த்தி தற்போதைக்கு நமக்கு குழந்தை தான் முக்கியம் என சொல்லி வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறி விடுகிறார். குடும்பத்தினர்கள் அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் மீனாவிற்கு மட்டும் சுத்தமாக பிடிக்கவில்லை. அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை ஏன் முல்லைக்காக நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி சண்டை போடுகிறார். இதற்குப் பிறகும் இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இதன் பின்பு முல்லை குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு பரிகாரம் செய்கிறார். பரிகாரம் செய்ய குடும்பத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனாலும் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் மறைத்து யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்கிறார். அதற்குப் பிறகு திடீரென கோவிலிலேயே மயங்கி விழுகிறார். குடும்பத்தினர்கள் பதறிப்போய் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். முல்லை கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மருத்துவர் தெளிவுபடுத்துகிறார். இதற்குப் பிறகு தற்போது குடும்பத்தினர்கள் வளைகாப்பு வைப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.