இயற்கையாகவே கருவுறும் முல்லை – மகிழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்! ப்ரோமோ ரிலீஸ்!
தற்போது தான் முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்விடைந்தது. இந்நிலையில், முல்லை இயற்கையாகவே கருவுறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் வரை செலவு செய்து முல்லைக்கு வைத்தியம் பார்த்தனர். ஆனால், செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக அனைவருக்கும் பயனளிக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. இந்த சிகிச்சை சில பேருக்கு மட்டுமே முதல் சிகிச்சையிலேயே வெற்றி பெறும்.
குழந்தை போல சைக்கிள் ஓட்டி விளையாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா – வைரலாகும் வீடியோ!
ஐந்து லட்சத்தை குடும்பத்தினர்கள் திரட்டவே மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி, வீடு கட்டும் பிளானை பாதியிலேயே நிறுத்தி மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். இதனால் முல்லைக்கு எப்படியாவது செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றி பெற்றே தீர வேண்டும் என குடும்பத்தில் உள்ள அனைவரும் வேண்டியபடி இருந்தனர். ஒரு வேளை செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். 5 லட்சத்துக்கான கடனை அடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகப் போகிறதோ என குடும்பத்தினர் புலம்பி கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
எதிர்பார்த்தபடியே முல்லைக்கு இந்த கருவுறுதல் சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இவ்வளவு பெரிய நஷ்டத்தை கொடுத்து விட்டோமே என முல்லை மன அழுத்தத்தில் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் இதற்குப் பிறகு தனக்கு குழந்தை பிறக்காதா என முல்லை தனக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார். முல்லையின் மனநிலையை மாற்ற குடும்பத்தினர்களும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடீரென முல்லை இயற்கையாகவே கருவுறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.