தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து – பொது மக்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து - பொது மக்கள் வரவேற்பு!
தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து - பொது மக்கள் வரவேற்பு!
தமிழகத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து – பொது மக்கள் வரவேற்பு!

தமிழகத்தின் முதல் முறையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் காற்று மாசுபாடு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு:

நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 407 என்ற அளவில் பதிவாகியுள்ளது. கடந்த தினங்களை காட்டிலும் இது அதிகம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி மட்டுமல்ல பீகார் உள்பட இந்தியாவின் பெரும்பாலான வட மாநிலங்களில் காற்று அதிகளவில் மாசு அடைந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் தமிழகத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் இயற்கை எரிவாயு பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என்பவர் தமிழகத்தில் முதல் முறையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்தை உருவாக்கியுள்ளார். ஏற்கனவே இயற்கை எரிவாயுவின் இயங்கக்கூடிய கனரக வாகங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் – முதல்வர் துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

ஆனால் பயணிகள் பேருந்துகளில் இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த பேருந்தில் இருந்து முற்றிலும் புகை வராது. மேலும் இந்த இயற்கை எரிவாயு டீசல் விலையை காட்டிலும் 40 ரூபாய் குறைவு என்றும் பேருந்து உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை எரிவாயு மூலம் இயங்க கூடிய இந்த பேருந்து முதல் முறையாக திருப்பூரில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!