மகளிருக்கு ஒரு கிலோ இயற்கை உரம் 1 ரூபாய் – மதுரை மாநகராட்சியின் புதிய அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் வெள்ளைக்கல் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உருவாக்கப்படும் இயற்கை உரத்தினை விவசாயிகள் உரிய சான்றிதழை காண்பித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு கிலோ இயற்கை உரத்தை 1 ரூபாய்க்கு பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இயற்கை உரம்:
விவசாயத்திற்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் செழிமையான விளைச்சல் கிடைக்கிறது. விலங்குகளின் கழிவு, இலைகள் போன்றவைகளை மக்கச்செய்து அவற்றை இயற்கை உரங்களாக பயன்படுத்துகின்றனர். இந்த இயற்கை உரங்கள் மண்ணின் வளத்தை காக்கிறது. நாம் செயற்கை உரங்களை பயன்படுத்தி குறைவான நேரத்தில் அதிக விளைச்சல் பெற்றாலும் அதில் சத்துக்கள் சேர்வதில்லை. எனவே இயற்கை உரங்களே விவசாயத்திற்கு உகந்தது.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!
விவசாயிகள் அதிகம் இயற்கை உரங்களை பயன்படுத்த வைக்கும் முயற்சியாக மதுரை மாநகராட்சியில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கு உட்பட்ட வீடுகள், உணவகங்கள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து தினசரி 400 முதல் 500 டன்கள் வரை குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவை தரம் பிரிக்கப்பட்டு, வெள்ளைக்கல் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரமாக தயாரிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த இயற்கை உரங்களை சிறு, குறு விவசாயிகள் சான்றிதழ் அல்லது விவசாய அட்டையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் கொண்டு வரும் வாகனங்களில் ஒரு மெட்ரிக் டன் உரம் ஏற்றுவதற்கு கூலியாக 100 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும். மேலும் அடையாள அட்டை இல்லாத விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு கிலோ இயற்கை உரம் 1 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.