நாடு முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வு – ஏஐசிடிஇ உத்தரவு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் மாணவர்கள் எதிர்காலம் காரணமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதால் பல சிரமம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் மகா சிவராத்திரி அன்று பொது விடுமுறை – முதல்வருடன் ஆலோசனை !!
எனவே விரைவாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பதால் பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்படுகிறது. அதனால் கல்லூரிகள் விரைவாக செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் முதல்வர் முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்கை நடத்தலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பொறியியல் படிப்பு கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏஐசிடிஇ.உத்தரவிட்டுள்ளது. மேலும் முதலாமாண்டு வகுப்புகளை அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.