நாடு முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இலங்கை முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் தனியார் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.
பேருந்து சேவை நிறுத்தம்:
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. பால், காய்கறிகள், பருப்பு வகைகள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து 8 மணி நேரத்திலிருந்து 13 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த நெருக்கடியின் காரணம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
Exams Daily Mobile App Download
பொருளாதார நிர்வாக சீர்கேடு காரணமாகவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையுடன் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாகவும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டீசலுக்குரிய பணத்தைச் செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை போக்குவரத்துத்துறையால் தனியார் போக்குவரத்து சேவைக்கு வழங்கப்படும் டீசலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
IBPS, RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
போதுமான டீசல் இல்லாததால் பெரும் அளவிலான பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் இன்று தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பள்ளி போக்குவரத்து சேவைகளும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ள பகுதிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.