நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை – மத்திய அரசு அதிரடி!
மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி நாடு முழுவதும் மக்கள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் அவை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்ய தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் தடை:
உலக நாடுகளில் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் அதிகமான பாதிப்புகள் வருகிறது. அதனால் அதனை சரி செய்ய உலக நாடுகள் அவசர நிலையில் இயங்கி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் ஹிமாலச்சப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், உத்தரபிரதேசம், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் முழுமையான தடை விதிக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
கோவா, குஜராத், கேரளா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பகுதியளவில் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு கேரளாவில் தடை விதிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் மற்றும் பாலித்தீன் கவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. குறைவான பயன்பாடும், அதிகமான பாதிப்பும் ஏற்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை வருகிற ஜூலை 1 முதல் தடை செய்யப்படுகிறது.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? நேரடி/ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறுகையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசு போதிய அவகாசம் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.