நாடு முழுவதும் ஏப்ரல் 15 முதல் முழு ஊரடங்கு? மத்திய அரசு விளக்கம்!
‘ஏப்ரல் 15 முதல் 30ம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவு’ என்கிற உரையுடன் கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
முழு ஊரடங்கு விளக்கம்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருவதால் மத்திய அரசாங்கம் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை விதிக்கக்கூடும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. மேலும் கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு உட்பட கடுமையான நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும் நோய் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதற்கிடையில் ஊரடங்கு குறித்து பல்வேறு வதந்திகளும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தற்போது ‘நாடு முழுவதும் ஏப்ரல் 15 – 30 வரை முழு ஊரடங்கு’ என்ற உரையுடன் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய பத்திரிகை தகவல் அமைச்சகம் விளக்கியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? தலைமை செயலாளர் ஆலோசனை!!
PIB யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், “புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 முதல் 30 வரை ஊரடங்கு விதிக்க இந்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறித்து சில நாட்களுக்கு முன்னர் மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவ்வாறு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்