ஜனாதிபதி கையால் அர்ஜுனா விருது பெற்ற செஸ் வீரர் பிரக்ஞானந்தா – குவியும் பாராட்டுக்கள்!
இந்தியாவில் இருந்து சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு மத்திய அரசின் சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் இருந்து விருது பெற்றவர்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
விருதுகள்:
சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு அரசு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் 2022 ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதில் உள்ள வீரர்களுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அதில் தமிழகத்தில் இருந்து டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் என்பவர் ‘கேல் ரத்னா’ விருதை பெற்றுள்ளார். இவர் நடப்பாண்டு இந்தியாவுக்கு 3 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த 2018 நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இரண்டு வெண்கலம் பெற்றார். அவரை தொடர்ந்து செஸ் வீரர் பிரக்ஞானந்தாவும் அர்ஜூனா விருது பெற்றார்.
இந்தியர்களின் 17 லட்சம் வீடியோக்களை அதிரடியாக நீக்கிய யூடியூப் – பகீர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
இவர் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் வெண்கலம் வென்றார். மேலும் அண்மையில் நடந்த ஆசிய செஸ் தொடரில் தங்க பதக்கம் பெற்றார். இவர்களை தொடர்ந்து கடலூரை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில், மதுரையை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோரும் ‘அர்ஜுனா’ விருதை பெற்றுள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்கள் விருது வழங்கி சிறப்பித்துள்ளார். விருது பெற்ற வீரர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.