32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்- முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு மாதம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 32-வது சாலை தேசிய பாதுகாப்பு மாதமாக இன்று முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை ‘சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் – தமிழக அரசிடம் கோரிக்கை!!
இதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை ‘சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நடத்தப்படும் விழாவில், தலைக்கவசம் அணிவது, சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாமல் இருப்பது உள்ளிட்ட உறுதிமொழி எடுத்தல்.
இன்று முதல் ஜனவரி 25 வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துவது, சிறப்பு வாகன சோதனைகள் நடத்துவது, தொடர் விபத்து சோதனைகளை கண்டறிதல் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்த்து விலைமதிப்பற்ற தங்களது உயிரை பாதுகாத்து கொள்ளவேண்டும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்